Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

3 மாவட்டங்களை நெருங்கிய நிவர்… அதி தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் மூன்று மாவட்டங்களை நெருங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் தீவிர புயலாக உருவாகியுள்ள நிவர் புயல் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தீவிர புயல் 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். தற்போது கடலூருக்கு 240 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 250 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 300 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் தற்போது மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் புயல் கரையை கடக்கும்போது 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |