Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

3 பேரை திருமணம் செய்த பெண்….. நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் நடிகை போல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் பலருடன் பூமிகா தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த பிரகாஷ் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பண்ருட்டியில் இருக்கும் பேக்கரி கடைக்கு வேலைக்கு செல்லும் போது ஆட்டோ ஓட்டுநரான சக்திவேல் என்பவருடன் பூமிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் பூமிகா சக்திவேலை திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டதன் மூலம் சக்திவேலின் நண்பரான சுமன் என்பவருடன் பூமிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரையும் பூமிகா திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த சுமன் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சக்திவேலை வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் அடுத்து பூமிகா திடீரென காணாமல் போய்விட்டார். இந்நிலையில் பண்ருட்டியில் இருக்கும் வீட்டிற்கு சென்ற பூமிகா எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |