சென்னை தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் அடுத்த இராமகிருஷ்ண புரத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் விஷாந்த், கோகுல், சுனில் குமார் ஆகிய மூன்று பேரையும் காணவில்லை என்று பெற்றோர் தேடி வந்த நிலையில், சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் அவர்களின் உடைகள் கிடந்ததை பார்த்துள்ளனர். குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக தேடி மூன்று சிறுவர்களையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர். சிறுவர்கள் ஏரியில் மூழ்கிய தகவல் அறிந்து பொதுமக்கள் ஏரிக்கரையில் திரண்டனர். மூன்று பேருமே உயிரிழந்த அதிர்ச்சி செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.