கேரளாவில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பினராய் விஜயன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பிரணாய் விஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பதவியேற்கும் 21 அமைச்சர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராய் விஜயனுக்கு இரண்டாவது முறை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து பினராய் விஜயன் தலைமையில் அமையும் புதிய மந்திரிசபையில் உள்ள 21 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.