Categories
தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராட்டம்… ரூ 64,00, 000 செலுத்துங்க… 28 பேருக்கு அதிரடி உத்தரவு..!!

லக்னோவில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதபடுத்தியதற்காக ரூ 64,00, 000 பணத்தை செலுத்த 28 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசு பேருந்து மற்றும் போலீசாரின் பைக்குகள்  உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதாப் ஜாபர் உள்ளிட்ட 28 பேர் 64,00,000 ரூபாயை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என லக்னோ மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த தொகையை செலுத்தவில்லையென்றால் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் தற்போது வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவில் பின் வாங்க போவதில்லை என்று மத்திய அரசு கூறியது நினைவு கூறத்தக்கது.

Categories

Tech |