தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.