Categories
மாநில செய்திகள்

2,500 க்கும் மேற்பட்ட….. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு…. தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை வழங்கிய ஈபிஎஸ் தரப்பு..!!

 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஈபிஎஸ் தரப்பு வழங்கியது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக் குழுவில் உள்ள 2,600 உறுப்பினர்களில் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து, ஏற்கனவே பெறப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது  2500 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது ஈபிஎஸ் தரப்பு. டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் வழங்கினார்.

சுயவிருப்பம், முழு மனதுடன் இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்தேன் என பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு கடிதம் எழுதியிருந்தனர். 2,500 க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ள உறுதி மொழி பத்திரத்தை ஈபிஎஸ் தரப்பிடம் வழங்கியிருந்தனர். அதனை டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது அதிமுக.

Categories

Tech |