நாடு முழுவதும் இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் 48 சதவீத உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும், குணமடைவர் எண்ணிக்கை 84 சதவீதமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் 48% 25 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும். அதில் 12 மாவட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவை என்றும் இந்த மாவட்டங்களில் உயிரிழப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழே குறைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.