மாணவர்களின் நலன் கருதி 25 சதவீத பள்ளி பாடங்களை குறைப்பதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது
மாணவர்களின் மன அழுத்தம் போக்கும் வகையில் பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையின்றி முடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை 25 விழுக்காடு குறைக்கலாம் என்று மகாராஷ்டிரா கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழு தெரிவித்துள்ளது.
மாநில அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பசாக் கெய்ப்பால் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்கிற விவரங்கள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் பசாக் கெய்ப்பால் தெரிவித்துள்ளார்.