வரும் கால கட்டங்களில் சுமார் 25 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பால் உலக பொருளாதார அளவில் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதனால் இந்த வருடம் 25 கோடி மக்கள் வரை வேலை இழப்பார்கள். என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக உலக மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு இருந்து வருகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய துறைகளில் இருக்கும் நபர்களுக்கு கூட வேலை இழப்பு, பணிநீக்கம், சம்பளம் பிடிப்பு போன்றவை வழக்கமாகி வருகிறது. இந்த பிரச்னை இன்னும் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். வேலை கிடைக்க அல்லது கிடைத்த வேலையில் நிலைத்திருக்க மக்கள் புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
25 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்பது அதிர்ச்சியான ஒரு விகிதம். கொரோனா தொற்றுக்கு எல்லை கிடையாது. அமெரிக்காவில் மட்டும் 3.5%லிருந்து 15.8 சதவீதமாக வேலையின்மை உயர இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க உள்ளார்கள். இதுபோன்ற சவால்கள் இன்னும் பல நாடுகளுக்கும் இருக்கின்றது” என்று கூறியுள்ளார். உலக அளவில் இந்த ஆண்டு கடைசிக்குள் 2.5 கோடி மக்களினுடைய டிஜிட்டல் தொடர்பான திறன் மேம்பாட்டிற்க்காக மைக்ரோசாப்ட் பயிற்சி தரும் என்று சென்ற மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இணைய ஏற்றத்தாழ்வு இருக்கும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே அதை சரி செய்யவில்லை என்றால் அதோடு சேர்த்து இன்னும் பல ஏற்றத்தாழ்வுகளை நாம் அதிகப்படுத்துவோம் அதற்காகவே இந்த பயிற்சி முன்னெடுப்பு என்று அவர் கூறியுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 14.9 கோடி பேருக்கு தொழில்நுட்பம் தொடர்பான வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று மைக்ரோசாப்ட் மதிப்பிடுகிறது.