Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 24 மதுக்கடைகள் இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்தது. மேலும் இந்த வழக்கை 8 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனவே மீண்டு கடைகளைத் திறப்பதற்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்பதால் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் 7 வண்ண டோக்கன் உரையை தசமாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரம் மற்றும் நாள் படி மதுபானங்களை மக்கள் வாங்கி செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்ற அனைத்து மாவட்ட எஸ்.பி மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதில் ” 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் கொடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்கவேண்டும், மது விநியோக கவுண்ட்டர்களை அதிகரிக்கச் செய்யவேண்டும், பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல உத்தரவுகள் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மதுக்கடைகளை திறப்பது குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |