Categories
மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை – இன்று ஒரே நாளில் 2,393 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னையில் இன்று புதிதாக 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 58,327ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 38,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 11,70,683 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,378 பேர் ஆண்கள், 1,565 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 55,502 ஆண்கள், 34,644 பெண்கள், 21 திருநங்கைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |