பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையாவது, “தமிழக மீனவர்கள் 23 பேர், வங்கக் கடலின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளையும் கைப்பற்றி உள்ளனர். இத்தகைய இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இலங்கைப் படையினர் கொரோனா காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை சற்று குறைத்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது.
எனவே மத்திய அரசானது வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் திரும்பி வருவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரமாக எல்லைகளை கடந்து மீன் பிடிக்கும் அனுமதிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையினை மீண்டும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை உடனடியாக விடுதலை செய்து, அவர்களின் படகுகளை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க கொடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.