Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

225 அரசு பள்ளிகளில்…. செஸ் ஒலிம்பியாட் போட்டி… 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சேஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற செஸ் போட்டிகளை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடைபெற்றது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற செ ஸ் விளையாட்டு போட்டிகளில் 225 அரசு பள்ளிகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட உதவி ஆய்வாளர் முத்துக்குமார், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், செந்தமிழ் செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |