அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனுடன் போட்டித் தேர்வுகள் நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,207காலி பணியிடங்களுக்கான முதுநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி போட்டித் தேர்வுகள் நவம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் trb.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.