Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |