2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 5-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்ஷ்வர்தன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.
டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் திரு. ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.