செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 5,253. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த 80 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.