Categories
தேசிய செய்திகள்

2014 ஓய்வூதிய திட்டம்….. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. செம குஷியில் ஊழியர்கள்….!!!!

இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டம் சட்டபூர்வமானது மற்றும் செல்லும் என்று அறிவித்த நிலையில் இதில் சில மாறுதல்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் ஓய்வூதிய திட்டத்தை கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ரத்து செய்தன.இருந்தாலும் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டம் சட்டபூர்வமானது மற்றும் செல்லுபடி ஆகும் என்று  உச்சநீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த பணியாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர விருப்பத்தை பயன்படுத்தாத ஊழியர்களுக்கு திட்டத்தில் இணைய மேலும் ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |