ஏ.டி.எம்மில் தவறவிட்ட 20 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறை சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவன் நகர் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரியா மேட்டு தெருவில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற போது 20,000 ரூபாய் இருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் அந்த பணத்தை அவர் காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து வழங்கி உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு நெல்லுக்கார தெருவில் இயங்கும் தனியார் வங்கி கிளை மேலாளரை நேரில் அழைத்து அவரிடம் பணத்தை பிரியாவின் மூலம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் செயல்பட்ட பிரியாவின் செயலை காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் பாராட்டியுள்ளார்.