Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்…. அதிர்ச்சியில் அதிராம்பட்டின மீனவர்கள்..!!

தஞ்சையில் அதிராம்பட்டின  பகுதில் கடல் நீரானது உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைத்தனர் .

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று காலை 5 மணி அளவில் ஏரிபுறக்கரை பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக துறைமுகத்துக்கு வந்துள்ளனர். ஆனால் கடலில் துறைமுக வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தன. துறைமுக கால்வாய்களில் எப்போதும் ஐந்தடி மடத்திற்கு கடல் நீர் காணப்படும். ஆனால் கடல் நீரானது 200 மீட்டர் தொலைவிற்கு மேல் கடல் உள்வாங்கிய நிலையில் உள்ளது.

பொதுவாக காலை நேரத்தில், தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை 50 மீட்டர் தூரத்திற்கு கடலானது உள்வாங்கி இருக்கும்.சில நாட்களாக கடலில் காற்றலைகள் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று மீன்பிடிக்க செல்வதற்காக வந்து இங்கே பார்த்தபோது கடல் உள்வாங்கிய உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர் . கடல் உள்வாங்கியதால் படகுகளை கடலில் செலுத்த இயலாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறைமுக வாய்க்கால்களை தூர்வாரி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கூறினர்.

Categories

Tech |