Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜேஸ் (42) என்பவர் தனது உறவினர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பழனி வழியாக கேரளாவிற்கு செல்ல இருந்தனர். அந்த வேனில் கொடைக்கானலில் இருந்து பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சால்தீன்(33) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் அஜேஸ், சால்தீன், பிரவீன், அவரது மனைவி ரம்யா சுமித், நிரஞ்சன், ஆதிஸ், சைவி ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜேஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஏழு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |