Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தன்னலமற்ற உழைப்பால் தான் முதல்வர் ஆனேன்….. ஜெயலலிதா பேரவையில் EPS பேச்சு….!!

ஜெயலலிதா ஆட்சியில் தன்னலமற்று உழைத்த  உழைப்பால் தான் இந்த பதவிக்கு வந்ததாகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு திட்டங்களை கிராமம்  முதல் நகரங்கள் வரை மக்களுக்கு துரித நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதோடு, அது குறித்த விளக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றார். தொடர்ந்து பேசிய  அவர்,

மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆச்சி காலத்தில் தான் தன்னலமற்று உழைத்த காரணத்திற்காக தற்போது எனக்கு முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது என்று தெரிவித்தார். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் உதயகுமார், அமைச்சர்கள், மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |