திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி சரணம் செய்துள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்கு மூன்று கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அறை கிடைக்காமல் பெரும்பாலான பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்கினர். 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிக பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதிக கூட்டம் காரணமாக விஐபி தரிசனங்களும் ரத்து செய்யப்போவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.