Categories
ஆன்மிகம்

20-ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்…. திருப்பதியில் 5 மணி நேரம் தரிசனம் ரத்து ….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையடுத்து அக்டோபர் 5-ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19-ஆம் தேதி எந்தவித சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோவில் சுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு 20-ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவிலை சுத்தம் செய்து மூலிகை கலவையை கோவில் சுவர்களில் தெளிப்பர். எனவே அஷ்ட தல பாதமாராதனை சேவை ரத்து செய்யப்படுவதோடு, சுமார் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Categories

Tech |