சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் 18வயது மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தொண்டி பேருந்து நிலையம், சின்ன தொண்டி அங்கன்வாடி மையம், எம்.ஆர்.பட்டினம் பள்ளிக்கூடம், பி.வி.பட்டினம் தர்கா, மகாசக்திபுரம் அங்கன்வாடி மையம், ஓடாவி தெரு, மீனவர் காலனி, வெள்ளை மணல் தெரு பள்ளி கட்டிடம், அனீஸ் நகர், பெருமானேந்தல் அங்கன்வாடி மையம், மழுங்கு சாகிபு தெரு,அரசு மருத்துவமனை, தெற்குதெரு அங்கன்வாடி மையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.