Categories
உலக செய்திகள்

தீவிரவாதியால் கொல்லப்பட்ட இளைஞர்கள்.. காரணத்தை கண்டறிந்த நடுவர் மன்றம்..!!

லண்டனில் நடந்த கைதிகள் மறுவாழ்வு நிகழ்வில் இரு பட்டதாரிகள் கொல்லப்பட்டதற்கு அரசு நிறுவனங்களின் தோல்வி தான் காரணம் என நடுவர்மன்றம் கண்டுபிடித்துள்ளது. 

பாகிஸ்தானில், உஸ்மான் கான் என்ற தீவிரவாதி, பயங்கரவாத பயிற்சி முகாம் அமைப்பதற்காக திட்டமிட்டதால், எட்டு வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில், லண்டனில் இருக்கும் Fishmongers என்ற ஹாலில், கைதிகள் மறுவாழ்வு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற Saskia Jones(23), Jack Merritt(25) ஆகிய இருவரையும் உஸ்மான் கான் குத்திக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து லண்டன் பிரிட்ஜ்-இல் காவல்துறையினர் உஸ்மான் கானை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்நிலையில் நடுவர் மன்றம், இந்த இரண்டு பட்டதாரிகளின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டது.

அதில் அவர்கள் தீவிரவாதியால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும் Fishmongers ஹாலில் நடந்த நிகழ்ச்சி அமைப்பில் இருக்கும் குறைபாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது தான், இரண்டு உயிர்கள் பலியாக காரணம் என்று நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது.

Categories

Tech |