Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு வந்த விவசாயி… வீட்டுக்கு சென்ற துயர செய்தி… நிலைகுலைந்த குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவர் கல்லகம் கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பாடாலுருக்கு சரக்கு ஏற்றி சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கல்லகம் கிராம நிர்வாகி போலீசாருக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெயபால் உடலை கைப்பற்றி லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான ராபின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |