ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை குறி பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.