Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பால்நடைப்பட்டி பகுதியில் சிட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிட்டு சொந்த வேலைக்காக பாளையத்திற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் ரங்கசாமி என்பவருடன் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் சிட்டு உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |