Categories
அரசியல்

“இன்னும் 2 பேருக்கு கொரோனா வந்தா மார்க்கெட்டை மூடிடுவோம்”… கோயம்பேட்டில் பரபரப்பு..!

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கு வருகின்றன.

அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல, கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனவும், மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் தெரிவித்தார். சென்னையில் மொத்தம் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |