Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டையுடன் பறந்த மோட்டார் சைக்கிள்…. சந்தேகமடைந்த காவல்துறை…. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வேகமாக சென்ற ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  சாக்குமூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மெய்ஞானபுரம் பகுதியில் வசிக்கும் வியாபாரியான அழகுவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |