Categories
மாநில செய்திகள்

2 வாரம் +1 வாரம் முழு ஊரடங்கு…. குடும்பத்திற்ற்க்கு ரூ.5000 நிதியுதவி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஏற்கனேவே இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையான நடைமுறைப்படுத்தி, பின்னர் இன்னொரு வாரம் இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்தினால் கட்டுக்குள் வந்துவிடும். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபாய் 5 ஆயிரம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Categories

Tech |