காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நதிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சாலியர் தெரு மெயின் ரோட்டில் பெண்கள் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தங்களது பகுதிக்கு குடிநீர் கிடைத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.