Categories
தேசிய செய்திகள்

2 லட்சம் காலிப்பணியிடங்கள்…. விரைவில் நிரப்புமா அரசு…?? எதிர்பார்ப்பில் வேலைதேடுவோர்….!!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் தங்களுடைய வேலை இழந்து பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர், இதனால் வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது கணிசமான அளவில் உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே துறையில் உள்ள 60 பிரிவுகளில் மொத்தம் 2 லட்சத்து ,2652 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன .

நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும் சூழலில் இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வேலை தேடுவோர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |