இந்திய கடற்படை சார்பாக மும்பையில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டுபயிற்சி நடைபெறுகிறது. இதுபற்றி கடலோர பாதுகாப்புபடை அதிகாரியான கேப்டன் சுனில்மேனன் கூறினார். அதாவது “இந்தியக் கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் சார்பாக கடலோர பாதுகாப்பு குறித்த கூட்டு பயிற்சி மும்பையில் இன்று மற்றும் நாளை(நவம்பர்..16) நடக்கிறது.
கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பயிற்சியில் பல பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொள்கின்றன. கடலோர காவல்படை மட்டுமின்றி குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகாவை சேர்ந்த காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, மீன்வளத்துறை, துறைமுக அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்” என்று அவர் கூறினார்.