பிளஸ் டூ தேர்வு குறித்து தலைமை செயலாளர் ராஜன் தலைமையிலான கூட்டம் இன்று மாலை ஆலோசனை செய்கின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்றது. இதன் காரணமாக நேற்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றதா இல்லை ரத்து செய்யப் படுகிறதா என்பது குறித்து விரிவான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.