தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இயக்குநர் கரு பழனியப்பன், “இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 24 மணி நேரம் கடந்து எந்த எதிர்மறை விளைவும் இல்லை. இந்த பெருந்தொற்றின் கண்ணியை உடைப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறது அறிவியல். தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு எடுத்திருக்கிறது தமிழக அரசு” என்று கூறியுள்ளார்.