Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்… பள்ளி வேன் மீது மோதிய சரக்கு லாரி… 19 குழந்தைகள் பலி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் தொடக்க பள்ளியை சேர்ந்த குழந்தைகள் சென்ற மினி வேன் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஸ்லு-நடால் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்ப மினி வேனில் ஏறியிருக்கிறார்கள். அந்த வேனில், குழந்தைகள் 19 பேர், வேன் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என்று 21 பேர் பயணித்திருக்கிறார்கள்.

நெடுஞ்சாலையில், பயணித்த வேன் மீதி எதிரில் வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கொடூர விபத்தில், அந்த வேனில் பயணித்த 21 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

Categories

Tech |