Categories
உலக செய்திகள்

அசால்ட்டாக…இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட இளம்பெண் கைது!

ஊரடங்கின் போது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் நேர்ந்த சம்பவம்…!

அரிஸோனாவை சேர்ந்து அலைஸ அல்டர் என்பவர் மே மாதம் 6ம் தேதி ஹொனோலுலுக்கு சென்றார். இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்தார். ஹவாய் தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி அலைஸ தன்னை தனிமைபடுத்திருக்க வேண்டும்.

ஆனால் மே 8ம் தேதியே அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அலைஸ தன்னை தனிமைப்படுத்திருக்க வேண்டிய நேரத்தில், ஒரு உணவகத்தில் வேலை செய்துள்ளார் எனவும் குறிப்பிடுகின்றனர். அலைஸவை அந்த உணவகத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்நாட்டின் விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |