Categories
தேசிய செய்திகள்

18.72 லட்சம் மாணவர்கள்….. கடும் கட்டுப்பாடுகளுடன்….. இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு…..!!!!

இந்தியா முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை எழுத சுமார் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கிறது.

Categories

Tech |