Categories
உலக செய்திகள்

“கவலை வேண்டாம்..!! நாங்க இருக்கோம்”…. தஞ்சமடைந்துள்ள அகதிகள்…. பிரபல நாட்டு உள்துறை மந்திரியின் தகவல்….!!

உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 17 ஆயிரம் அகதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு அஞ்சி அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். குறிப்பாக உக்ரைன் நாட்டில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் பேர் பிரான்ஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டர்மானின் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உக்ரைன் நாட்டில் இருந்து வரும் ஒரு லட்சம் அகதிகளை பிரான்ஸ் நாட்டில் தங்க வைக்க உள்துறை அமைச்சகம் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |