Categories
மாநில செய்திகள்

17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி 17 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த அறிக்கையின் படி சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக அபின் தினேஷ் மோதக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டி.ஜி.பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் சுமித் சரண் என்பவர் ஐ.ஜி ஆக இருக்கிறார். இவர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜார்கண்ட் பகுதியில் சி.ஆர்பி.எஃப் ஐஜி ஆக மகேஷ்வர் தயால் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏ.டி.ஜி‌ பியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. மத்திய அரசு பணியில் ஆயுஷ்மான் திவாரி என்பவர் ஐ.ஜி ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏ.டி‌‌.ஜி.பி ஆக பதவி உயர்வு கிடைத்துள்ளது. ‌

காத்திருப்பவர்கள் பட்டியலில் ஐ.ஜி ஜெயராம் இருந்தார். இவரை சென்னை ஆயுதப்படை கூடுதல் கமாண்டன்ட்  ஜெனரலாக நியமித்துள்ளனர். சென்னை செயலாக்க பிரிவு ஐ.ஜி யாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் நலன் ஏ.ஐ.ஜி ஆக பணியாற்றி வந்த சம்பத்குமார் ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் பணியாற்றி வந்த சுமித் சரனுக்கு கூடுதல் டி.ஜி.பி யாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

நெல்லை மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையாளராக ஐ.டி துரைகுமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரை மதுவிலக்கு துறை ஐ.ஜி யாக நியமித்துள்ளனர். சென்னை மாவட்ட கூடுதல் சட்ட ஒழுங்கு ஆணையாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவரை மதுரை மாவட்ட காவல் ஆணையாளராக நியமித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்கா வை சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி ஆக நியமித்துள்ளனர். தென்மண்டல ஐ.ஜி ஆக டி.எஸ் அன்பு என்பவர் பணியாற்றி வந்தார். இவரை சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளராக நியமித்துள்ளனர். மத்திய அரசு பணியில் பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை தென் மண்டல ஐ.ஜி ஆக நியமித்துள்ளனர்.

Categories

Tech |