Categories
மாநில செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும்…. இன்று தொடங்கிய அகழாய்வுப் பணிகள்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆய்வு பணிகள் இன்று துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில், கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகலாய்வு பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 1903,1904ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு பணி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2004- 2005 ஆம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகலாய்வு பணியானது 600 சதுர மீட்டர் அளவில் நடைபெற்றது. அதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு,வெண்கலப் பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 17 ஆண்டுகள் கழித்து மத்திய தொல்லியல் துறை சார்பாக இன்று அகலாய்வு பணி துவங்கியுள்ளது. இந்த அகழாய்வு பணியினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். இப்போது அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பணிக்காக மத்திய அரசு ரூபாய் 17 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி போதுமானதாக இருக்காது. அதனால் கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அகழாய்வு இயக்குனருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பணிகள் 3 மாதம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |