சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் கம்பெனிகளில் வேலை வாங்கித் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி வருகின்ற 28ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மையம் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பை தேடுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு இயக்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.