Categories
தேசிய செய்திகள்

15.78 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் 15 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 15 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 240 பேரின் இரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக  பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 960 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |