இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 312 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,78,014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,35,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 67,706 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6,283 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 1,35,796 ஆக உள்ளது. தமிழகத்தில் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 27,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 15,232, ஹரியானா – 11,025, கர்நாடகாவில் 9,372 பேரும், ஆந்திரா – 9,372, தெலுங்கானா – 8,674, பீகார் – 7,825, கேரளா – 3,310 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.