Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,443 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,537ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது.

தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |