Categories
உலகசெய்திகள்

1,441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப்பெறும் ஓலா நிறுவனம்…. ஏன் தெரியுமா…?

ஓலா  மின்சார  ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில்உள்ள  மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்க்கு காரணம் உலக நாடுகளில்  பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்ததாக கூட இருக்கலாம்.  இந்நிலையில் இந்திய நாட்டில்மட்டும்  4இடங்களில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவங்களை தொடர்ந்து பரிசோதனை பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெற இருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. மேலும் மின்சார ஸ்கூட்டர் தொடர்பான பேட்டரி வெடித்து தீப்பிடித்தது தொடர்பான வெவ்வேறு விபத்துகளில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிகின்றது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சாலையோரம் நின்றிருந்த  எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ் 1ப்ரோ மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து குறைபாடுள்ள மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தனது நிறுவனத்தின் s1pro வகையை சேர்ந்த 1441 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்துள்ளது. அந்த வாகனங்களை தனது நிறுவனங்களின் பொறியாளர்கள் ஆய்வு செய்து அவற்றின் பேட்டரி சாதனங்கள் வெப்பம் சார்ந்த உதிரிபாகங்கள், பாதுகாப்பு சாதனங்களை முழுமையாக பரிசோதிப்பார் என ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.ஓலா

Categories

Tech |