Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 144 தடைஉத்தரவு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்டு வரக்கூடிய நோய் தடுப்பு நடவடிக்கை கண்காணிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு துறையை சார்ந்தவர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசசிக்க பட இருக்கின்றது. குறிப்பாக 144 தடை உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதனை முழுமையாக அமல்படுத்த வேண்டிய நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு என்ன அறிவுறுத்தல் கொடுக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

Categories

Tech |